வியாழேந்திரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு !

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்த காலம் தொடக்கம் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் இன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் எதிர்க்கட்சிதான் அன்று ஆட்சியிலிருந்தபோதும் தெரிந்திருந்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.இது தொடர்பான வழக்கு இன்று (07)மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த வழக்கினை ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...