ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகருடன் சஜித் பிரேமதாஸ முக்கிய சந்திப்பு

Date:

அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் பொப் கெரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அவர் ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகராகவும் பணிபுரிந்தவராவார். இரு நாடுகளையும் பாதிக்கும் பல பொதுவான பிரச்சினைகள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவின் பிரகாரம் செயல்படுத்தப்படும் “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” திட்டங்கள் குறித்து பொப் கெரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்ததோடு, தொடர்புடைய நலன்புரித் திட்டங்களில் அமெரிக்க பரோபகாரர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...