ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகருடன் சஜித் பிரேமதாஸ முக்கிய சந்திப்பு

Date:

அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் பொப் கெரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அவர் ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகராகவும் பணிபுரிந்தவராவார். இரு நாடுகளையும் பாதிக்கும் பல பொதுவான பிரச்சினைகள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவின் பிரகாரம் செயல்படுத்தப்படும் “மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” திட்டங்கள் குறித்து பொப் கெரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்ததோடு, தொடர்புடைய நலன்புரித் திட்டங்களில் அமெரிக்க பரோபகாரர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...