பெற்றோல், டீசல் விலை 20 மற்றும் 22 ரூபாவினால் அதிகரிக்கும்

Date:

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று அல்லது நாளை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

“இன்று அல்லது நாளை பெட்ரோல் 20 ரூபாயும், டீசல் 22 ரூபாயும் அதிகரிக்கும் என்று கணிக்கிறேன். இன்றிரவு கூட அதிகரிக்கலாம். எமது ஆட்சி காலத்தில் பெட்ரோலுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட போது சிலர் சைக்கிளில் பாராளுமன்றம் சென்றது மக்களுக்கு நினைவிருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பே 20 ரூபாய் அதிகரித்தது. தற்போது மீண்டும் 20 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் கம்மன்பில கதறி அழுதார், ‘எனக்கு இப்போது செய்ய ஒன்றுமில்லை, உலகில் மிகவும் தாழ்வான நாடு எமது நாடு, எண்ணெய் கொண்டு வர டொலர் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கூறுகிறது, பணம் இல்லை, அதனால் ஒரு மாதத்திற்கு மேல் இயங்க முடியாது’ என கம்மன்பில கூறுகிறார்.

அது யாருடைய தவறு? என அசோக் அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...