பெற்றோல், டீசல் விலை 20 மற்றும் 22 ரூபாவினால் அதிகரிக்கும்

Date:

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று அல்லது நாளை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

“இன்று அல்லது நாளை பெட்ரோல் 20 ரூபாயும், டீசல் 22 ரூபாயும் அதிகரிக்கும் என்று கணிக்கிறேன். இன்றிரவு கூட அதிகரிக்கலாம். எமது ஆட்சி காலத்தில் பெட்ரோலுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட போது சிலர் சைக்கிளில் பாராளுமன்றம் சென்றது மக்களுக்கு நினைவிருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பே 20 ரூபாய் அதிகரித்தது. தற்போது மீண்டும் 20 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் கம்மன்பில கதறி அழுதார், ‘எனக்கு இப்போது செய்ய ஒன்றுமில்லை, உலகில் மிகவும் தாழ்வான நாடு எமது நாடு, எண்ணெய் கொண்டு வர டொலர் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கூறுகிறது, பணம் இல்லை, அதனால் ஒரு மாதத்திற்கு மேல் இயங்க முடியாது’ என கம்மன்பில கூறுகிறார்.

அது யாருடைய தவறு? என அசோக் அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...