பெற்றோல், டீசல் விலை 20 மற்றும் 22 ரூபாவினால் அதிகரிக்கும்

Date:

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று அல்லது நாளை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

“இன்று அல்லது நாளை பெட்ரோல் 20 ரூபாயும், டீசல் 22 ரூபாயும் அதிகரிக்கும் என்று கணிக்கிறேன். இன்றிரவு கூட அதிகரிக்கலாம். எமது ஆட்சி காலத்தில் பெட்ரோலுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட போது சிலர் சைக்கிளில் பாராளுமன்றம் சென்றது மக்களுக்கு நினைவிருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பே 20 ரூபாய் அதிகரித்தது. தற்போது மீண்டும் 20 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் கம்மன்பில கதறி அழுதார், ‘எனக்கு இப்போது செய்ய ஒன்றுமில்லை, உலகில் மிகவும் தாழ்வான நாடு எமது நாடு, எண்ணெய் கொண்டு வர டொலர் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கூறுகிறது, பணம் இல்லை, அதனால் ஒரு மாதத்திற்கு மேல் இயங்க முடியாது’ என கம்மன்பில கூறுகிறார்.

அது யாருடைய தவறு? என அசோக் அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...