வசந்த முதலிகே மீண்டும் கைது!

0
123

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தை மீளத் திறக்குமாறு கோரி, நேற்று (பிப்ரவரி 22) ஹோமாகம, பிடிபன சந்தியில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது, தமக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பலாத்காரம் தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) மாணவர் பௌத்த பிக்குகள் நேற்று மாலை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here