Friday, May 17, 2024

Latest Posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40க்கும் அதிகமான தொழிசாங்கங்கள் நாளை முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முழு நாட்டை முடக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.