விசேட பொருளாதார வலயங்களில் அபிவிருத்தி

Date:

பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு – வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான இந்தப் பிரதான நகர அபிவிருத்தியை, நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் முதலாம் கட்டத்தின் கீழ் காலி, பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட விசேட பொருளாதார வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

புதிய திட்டத்தில் பாரிய வீதிகள், வாகன தரிப்பிட வசதிகள், நடைபாதைகள், வர்த்தக நிலையங்கள், சூரிய சக்தியில் இயங்கும் ஔி விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டங்களை அமுல்படுத்தும் போது, ​​சம்பந்தப்பட்ட நகரங்களை அண்மித்துள்ள வரலாற்றுச் சின்னங்களும் பழமை வாய்ந்த கட்டிடங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...