கண்டியில் கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் உள்ள போகம்பர பகுதியில் இந்த திட்டம் இருப்பதாகவும், இன்று காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்