சஜித் – விமல் அணி பேச்சுவார்த்தை வெற்றி – அடுத்தக்கட்ட நகர்வுக்கும் இணக்கம்

Date:

இன்று (25) காலை ஐக்கிய மக்கள் சக்திக்கு சுயாதீன நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.எம். மரிக்கார், டொக்டர் ராஜித சேனாரத்ன, டொக்டர் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோர் கலந்துகொண்டனர்.

விமல் வீரவன்ச மற்றும் சுயாதீனக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் குழுவினர் கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.

இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் சில தினங்களில் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை இன்று...

லாபத்தில் இயங்கும் கடதாசி தொழிற்சாலை

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும்...

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...