113ஐ பூர்த்தி செய்துவிட்டோம் – ராஜபக்ஷ அணியை கதிகலங்க வைத்துள்ள செய்தி

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீன எம்.பி.க்களாக உள்ள 41 பேரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியெல்ல, பிரேரணை சமர்ப்பிக்கப்படும் விதம், கையளிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லாபத்தில் இயங்கும் கடதாசி தொழிற்சாலை

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும்...

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...