113ஐ பூர்த்தி செய்துவிட்டோம் – ராஜபக்ஷ அணியை கதிகலங்க வைத்துள்ள செய்தி

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீன எம்.பி.க்களாக உள்ள 41 பேரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியெல்ல, பிரேரணை சமர்ப்பிக்கப்படும் விதம், கையளிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...