Saturday, July 27, 2024

Latest Posts

கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

குறித்த குழு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் இருந்து கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டதால் அமைதியின்மையைத் தூண்ட எதிர்பார்த்திருந்த இந்த குழுவின் திட்டமிட்ட முயற்சி முறியடிக்கப்பட்ட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகள், சுதந்திர சதுக்கம், கொள்ளுப்பிட்டி சந்தி, அலரிமாளிகை உட்பட கொழுப்பின் பல பகுதிகளுக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.