அல்லைப்பிட்டி படுகொலை நினைவேந்தல்

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை இடம்பெற்ற இடத்தில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு அல்லப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்கு தந்தையுமான பேனார்ட் றெக்னோ சிவில் சமூக செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் சிவில் சமூக செயற்பாட்டாளர் அல்லைப்பட்டி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...