வீட்டுக்கு அனுப்பப்பட்டார் பொலிஸ் மா அதிபர், தேசபந்து இடமாற்றம்

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ஆம் திகதி கோட்டாகோகம கிராமத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே பொலிஸ் மா அதிபரின் கட்டாய விடுப்புக்கும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இடமாற்றத்துக்கும் காரணம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...