IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

0
157

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும் பெறுவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் பெரிதும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என சமகி ஜன பலவேகயின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

“இப்போது அவர்கள் பெருமையாக வரும் 27ஆம் திகதி IMF இலிருந்து 700 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். கடன் கிடைத்தால் ஒரு வாரத்திற்கு டாலர் மதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் IMFக்கு பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இன்று நான் சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்; டீசல் லிட்டருக்கு 150 ரூபாய் உயர்வதைத் தடுக்க முடியாது. அடுத்த வாரத்திற்குப் பிறகு உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, மருந்துகள், பால் தூள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும், வெளிநாட்டு உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அரிசி விலையும் கூட உயர வாய்ப்புள்ளது. எனவே நாட்டின் குடும்பத் தலைவியர்கள் பொருட்களின் விலை உயர்வால் தபால்மூலம் நல்ல பதிலை அளிப்பார்கள்” என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here