அஹங்கமவில் 27 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

0
107

அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் இன்று (04) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் டிக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அங்ககம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here