பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விரைவில் இராஜினாமா..

0
268

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைவாக இது மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்பாக 21வது திருத்தத்திற்கு தடையாக உள்ள பசில் ராஜபக்ச மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வகையில், இந்த இராஜினாமா அரசியல் ரீதியில் மிகவும் முன்னேறிய, கூர்மையான மற்றும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here