முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

Date:

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்குகொள்ளவே ஜனாதிபதி நேரில் முல்லைத்தீவு செல்கின்றார். இம் நடமாடும் சேவையில் அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பிறப்பு இறப்பு பதிவுகள் என்பன ஒரே நாளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இச் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் இதற்கான ஆவணங்களை முற்கூட்டியே பெற்று உரிய அதிகாரிகளின் கையொப்பத்தை பெறுவதன் மூலம் இந்த நடமாடும் சேவையில் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் சந்நர்ப்பம் உள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...