நுவரெலியாவில் மலர்கிறது இதொகா – என்பிபி ஆட்சி!

Date:

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை இன்று கொட்டைகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை உறுப்பினர்களுடன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...