மைத்திரியின் கடிதத்திற்கு புடின்னின் பதில் கடிதம்

Date:

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடந்த 5ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி புடின் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரியினால் நேற்று சிறிசேனவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏரோஃப்ளோட் இலங்கையுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்ய தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு ரஷ்ய தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க எரிபொருள், உரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலையிடுமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...