நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்க அனைத்து தனியார் தாங்கி உரிமையாளர்களுக்கும் IOC அழைப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட சகல தாங்கிகளின் உரிமையாளர்களையும் நாளை (01) கடமைக்கு சமூகமளிக்குமாறு IOC பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்காக சுமார் 7,500 மெற்றிக் தொன் டீசலை ஐஓசியிடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான கொடுப்பனவுகளையும் செய்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...