டிரானின் அதிரடி பணிப்பில் STF களத்தில்

Date:

தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின்படி இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, இந்த பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தென் மாகாணத்தில் இருந்து 20 விசேட குழுக்களும் மேல் மாகாணத்தில் இருந்து 15 விசேட குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துரித நடவடிக்கை மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர பாதாள உலக தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மறைந்திருக்கும் இடங்கள் மற்றும் துப்பாக்கிகள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை தேடும் பணியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...