கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

Date:

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொஸ்கொட ஹதரமன்ஹந்திய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இது முன்னெடுக்கப்படுவதாக பொலீசார் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் காவல்துறையும் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...