ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாளை மறுதினம் அறிவிக்கும் விமல் அணி

Date:

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம் (04) அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், திலித் ஜயவீரவே முன்மொழியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாளை மறுதினம் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள உள்ளனர்.

இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியன் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, காமினி வலேபொட, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...