ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாளை மறுதினம் அறிவிக்கும் விமல் அணி

Date:

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம் (04) அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், திலித் ஜயவீரவே முன்மொழியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாளை மறுதினம் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள உள்ளனர்.

இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியன் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, காமினி வலேபொட, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...