அவசரகாலச் சட்டம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது – ஜனாதிபதி ரணில்

Date:

நாட்டில் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை நாங்கள் செலவிடுகிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை இழந்ததைக் கணக்கிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் நமக்கு சவாலாக உள்ளது. நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், அவசரகாலச் சட்டத்தை இனி நீடிக்கப் போவதில்லை. இது இந்த வார இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பது பற்றிய அணுகுமுறையில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை நாம் உருவாக்கினால், இந்த நாட்டிற்கு எதிர்காலம் இருக்கும், இல்லையென்றால், இந்த நாடு மற்றொரு லெபனானாக மாறும்.

நேற்று (16) நடைபெற்ற அறிஞர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...