மன்னார் உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 03 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.