இன்னும் சற்று நேரத்தில் இலங்கை மண்ணில் காலடி வைக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு இலங்கை திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சவின் விமானம் இன்று இரவு 12 மணிக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச ஜூலை 9ஆம் திகதி விமானப்படை விமானத்தில் மாலைதீவுக்கு புறப்பட்டார்.

சில நாட்களில் சிங்கப்பூர் சென்று தாய்லாந்து சென்றுவிட்டார் கோட்டாபய ராஜபக்சவின் நாடு திரும்புவது தொடர்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் திகதி அல்லது தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...