உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மசோதாவுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, 45 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பில் திருத்தங்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.