எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில்

0
236

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, டலஸ் குழு, 43 அணி, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக ஒரே மேடைக்கு வந்து செயல்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்த குழுக்கள் கூட்டு அறிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளன.

முன்னதாக, இந்த குழுக்கள் அனைத்தும் இணைந்து இது தொடர்பாக விவாதம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here