ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை சட்டத்திற்கு முரணாக அறிவிக்குமாறு கோரி அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை விஜித் மலல்கொட இன்று (23) பெற்றுக்கொண்டார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.