அறுகம்பை கடற்கரையில் சுற்றிவளைப்பு – பாதுகாப்புக்காக சோதனை சாவடிகள்

Date:

அறுகம்பை பிரதேசத்தில் ஹேட்டல்களில் தங்கி இருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் இரவு இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் நீர்சறுக்கல் விளையாட்டு இடம்பெறும் முக்கிய பகுதியாக பொத்துவில் அறுகம்பை கடற்கரை திகழ்கிறது. இதனால் இங்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்கள் அறுகம்பைவில் உள்ள ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து செல்வார்கள். அறுகம்பைக்கு அதிகமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், இவர்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து தமது சுற்றுலாவை கழிப்பார்கள்.

இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்களை நடத்த இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் பிரகாரம் இவ்வாறு சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அறுகம்பை கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதுடன், முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...