மற்றும் ஒரு போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் STF சுற்றிவளைப்பில் கைது

Date:

பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர், பாணந்துறை திக்துடுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய, திட்டமிட்ட குற்றவாளியான பாணந்துறை சாலிந்துவின் நெருங்கிய உறவினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

டுபாயில் இருந்து செயற்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்  தொடர்பை பேணி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...