வீதி விபத்து தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் பொறுமதியான சரீர பிணை மற்றும், 2,500 ரூபாய் ரொக்கப் பிணையில் செல்வதற்கு கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் சஞ்சய் எல்.எம்.விஜேசிங்கவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.