கொழும்பு 11 முதல் 15 வரையான 5 பகுதிகளுக்கு நாளை (24) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பத்தளை நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஆற்றல் சேமிப்பு திட்டம் காரணமாக நாளை (24) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (25) காலை 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் குறிப்பிடுகிறது.