சீனாவுக்கு நோரோச்சோலை ; கொரியாவுக்கு லக்ஷபான!

Date:

இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நொரோச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நொரொச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின் அலகு அரசாங்கத்திடம் இருந்து பெறும் விலை மற்றும் நுகர்வோருக்கு அரசாங்கம் வழங்கும் விலையை நிர்ணயம் செய்வதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்யவிருக்கும் வெளிநாட்டு நிறுவனம் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...