ஜனாதிபதி ரணிலுக்கு வலு சேர்க்கும் லன்சா குழுவின் நடவடிக்கை புத்தளத்தில்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட நடவடிக்கைகள் 5 தொகுதிகளிலும் டிசம்பர் மாதம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் பிரதேச பிரதிநிதிகள் நியமனம், இணைந்த அமைப்புக்களை நிறுவுதல், பிக்குகள் அமைப்புகளை நிறுவுதல், பெண்கள் அமைப்புகளை ஸ்தாபித்தல் போன்றன இந்த மாதம் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், சிறிபால அமரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோர் அந்த நிகழ்ச்சிகளை வழிநடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் தொகுதியை மையமாக வைத்து, மாகாண சபையின் நடமாடும் சேவை ஒன்று, மாதம்பே கருக்குவ சுகதானந்த மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வடமேற்கு ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் நிமல் லான்சா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அது முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் அதனை வெளிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...