சஜித் பக்கம் மேலும் நான்கு எம்பிக்கள்

Date:

டலஸ் அழகப்பெரும தலைமையிலான ஜனதா சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர ஜனதா சபையின் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகிய நால்வரும் விரைவில் சஜித் பிரேமதாச அணியில் இணையவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைவது தொடர்பில் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் இரு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை கருத்திற் கொண்டு சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியில் ஒன்றிணைய வேண்டும் என எம்பிக்கள் குழு கூட்டத்தில் நால்வரும் சுதந்திரமாக அறிவித்துள்ளனர்.

டலஸ் அழகப்பெரும உட்பட பலர், ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்தால், தொடர் நிபந்தனைகளுடனும் வேலைத்திட்டத்துடனும் கூட்டணிக்குள் பிரவேசிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

இல்லையேல் இணைவதில் அர்த்தமில்லை என்று காட்டியுள்ளனர்.

சுதந்திர மக்கள் சபை எம்.பி.க்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை நாவலவில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதன்படி அந்த நான்கு எம்பிக்களும் விரைவில் சஜித் அணியில் இணைய உள்ளனர். சுதந்திர மக்கள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களின் எண்ணிக்கை பதின்மூன்று ஆகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...