கேப்டன் விஜயகாந்திற்கு யாழில் அஞ்சலி

Date:

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு ஈழத் தமிழ் இரசிகர்களும் தங்களது இறுதி மரியாதையினை செலுத்தும் வகையில் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை அமைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்றுவரையில் கேப்டன் விஜயகாந்த் தமிழ் ஈழத்தின் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தவர்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தார்.

“ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்த வல்லல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈழத் தமிழர்களின் துயரில் பங்குகொண்ட மாபெரும் தலைவருக்கு ஈழ மண்ணில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...