கேப்டன் விஜயகாந்திற்கு யாழில் அஞ்சலி

Date:

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு ஈழத் தமிழ் இரசிகர்களும் தங்களது இறுதி மரியாதையினை செலுத்தும் வகையில் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை அமைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்றுவரையில் கேப்டன் விஜயகாந்த் தமிழ் ஈழத்தின் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தவர்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தார்.

“ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்த வல்லல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈழத் தமிழர்களின் துயரில் பங்குகொண்ட மாபெரும் தலைவருக்கு ஈழ மண்ணில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...