காரைநகர் பிரதேச சபைக்கு மீண்டும் ம. அப்புத்துரை

Date:

காரைநகர் பிரதேச சபையில்  தவிசாளராக மீண்டும்  மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.

காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்தமையினால் தவிசாளர் பதவியை இழந்தார். இதன் காரணமாக இன்று காலை உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் மயிலன் அப்புத்துரையின் பெயர் தவிசாளராக பிரேரிக்கப்பட்டது. இதன்போது 11 பேர் கொண்ட சபையில் 7 பேர் மட்டுமே பிரசன்னமாயிரிந்தபோதும் வேறு பெயர் ஏதும் பிரேரிக்கப்படவில்லை. இதனால் மயிலன் அப்புத்துரை மீண்டும. தவிசாளராக போட்டியின்றித் தேர்வானார்.

இதேநேரம் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...