காரைநகர் பிரதேச சபைக்கு மீண்டும் ம. அப்புத்துரை

Date:

காரைநகர் பிரதேச சபையில்  தவிசாளராக மீண்டும்  மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.

காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்தமையினால் தவிசாளர் பதவியை இழந்தார். இதன் காரணமாக இன்று காலை உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் மயிலன் அப்புத்துரையின் பெயர் தவிசாளராக பிரேரிக்கப்பட்டது. இதன்போது 11 பேர் கொண்ட சபையில் 7 பேர் மட்டுமே பிரசன்னமாயிரிந்தபோதும் வேறு பெயர் ஏதும் பிரேரிக்கப்படவில்லை. இதனால் மயிலன் அப்புத்துரை மீண்டும. தவிசாளராக போட்டியின்றித் தேர்வானார்.

இதேநேரம் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...