மீண்டும் அரசியல் களத்தில் மேர்வின் சில்வா, பைத்தியம் என்று கூறிய மைத்திரியுடன் இணைவு

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த மேர்வின் சில்வா, அவ்வப்போது கட்சி மாறுவதில் பெயர் பெற்ற அரசியல் பிரமுகர்.

2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட மேர்வின் சில்வா, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் மௌனமாக இருந்த சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...