போராட்டத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு செயற்பட்டது

Date:

அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் போராட்டம் தொடர்பாக பல உண்மைகளை வெளியிட்டு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுமக்கள் போராட்டம் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக போராட்டம் தொடர்பாக தாம் சேகரித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு குழு செயற்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பலரின் பெயர்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த மே மாதம் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக பொஹொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் பாதுகாப்பு செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது போராட்டம் தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படும் விதத்தில் கடந்த காலங்களில் சட்டம் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...