இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 600 பேர் கைது

Date:

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று வெலிப்பாறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் உள்ளனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 600 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...