யாழ். குடாநாட்டில் 3 தினங்களாக விடாது பெய்யும் தொடர் மழை

Date:

யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகிய நிலையில் இதுவரை 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பல நூறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதில் தாழ்வான பிரதேசங்கள் மற்றும் குடிசை வீடுகள், வீட்டுத் திருத்த வேலைகளில் அகப்பட்ட குடும்பங்களே அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக ஏற்படுவதன் காரணமாக குளிருடன் கூடிய காலநிலையும் காணப்படுவதனால் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்பினை எதிர்கொள்கின்றனர்.

மழை காலத்தில் வீட்டில் சமைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காலத்தில் உடனடி பசிக்கு உணவளிக்கும் பாணின் விலை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் அதனைப் பெறுவதிலும் பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.

  • Dayalan – vk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்...

ரணிலுக்கு ஆதரவாக பலர் களத்தில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

கைதான ரணில் நீதிமன்றில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு...

ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு...