கம்பளை – கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து பண வைப்பு இயந்திரமொன்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து இயந்திரத்தை ஏற்றியுள்ளனர்.
வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டி வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் சாரதி கட்டி வைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.