பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் என்ன?

Date:

மார்ச் 19 அன்று முடிவடைந்த பிறகு அவற்றைப் பராமரிப்பது பற்றி விவாதிக்கிறது

மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு), ஜீவன் தியாகராஜா (வடக்கு), பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கோஸ்டா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...