ரணிலுக்கு ஆதரவு, சஜித் – ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – ராஜித

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்திற்கும் வித்தியாசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி – ஐமச ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இல்லை எனவும், தற்போது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதியுடன் உடன்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டில் பாரிய சாதகமான மாற்றம் காணப்பட்டதாகவும், நாட்டு மக்களும் ரணில் விக்கிரமசிங்க மீது மிகுந்த அபிமானத்தை கொண்டுள்ளதாகவும் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...