நாட்டில் 100க்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

Date:

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 1,347 மருந்து வகைகளில் மொத்தம் 112 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னதாக 150 மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்ததாகவும், தற்போது அது 112 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

ஆண்டுதோறும் மருந்து இறக்குமதிக்காக ரூ.50 பில்லியன் செலவிடப்பட்டுகிறது. கூடுதலாக ரூ.40 பில்லியன் இந்த ஆண்டு மருந்து இறக்குமதிக்காக அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலைகளில் பல நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்து நிலைமையை சரி செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...