பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு

Date:

IGP சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு சபையும் அங்கீகரித்திருந்தது.

இந்நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும்வரை சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 வார கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் தேவையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...