பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு

Date:

IGP சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு சபையும் அங்கீகரித்திருந்தது.

இந்நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும்வரை சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 வார கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் தேவையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...