மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் கப்பம் கோரியவர் கைது

0
192

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ஆம் ஆண்டு அதிஸ்டலாப சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மச்சான் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஸ்டலாப சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி அதிஸ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தை குறித்த உறவினரான மச்சான் சென்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கப்பம் கோரிய நபரை கைது செய்தனர்.

இதில் கைது கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்திய இதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here