ஜனாதிபதி தேர்தல் போட்டி! ரணிலின் உறுதியற்ற பதில்

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீங்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டீர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? இல்லை?” என்று அமைச்சர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இன்னும் வருகிறேன் என்று சொல்லவில்லை, வரவில்லை என்றும் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்து புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...