ஜனாதிபதி தேர்தல் போட்டி! ரணிலின் உறுதியற்ற பதில்

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீங்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டீர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? இல்லை?” என்று அமைச்சர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இன்னும் வருகிறேன் என்று சொல்லவில்லை, வரவில்லை என்றும் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்து புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...