மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அதேவேளை, மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகத் தான் தொடர்ந்து குரல் கொடுக்கின்றார் என்றும், தமது கட்சியின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் சிறீதரன் எம்.பி. உறுதியளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...