தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக புதிய கூட்டணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் புதிய கூட்டணியுடனான ஒப்பந்தங்களும் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவராக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...